அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இன்சூரன்ஸ் தொகை: கோவில்பட்டி கோட்டாட்சியரிடம், தலையில் முக்காடு போட்டு வந்து காங்கிரசார் மனு


கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை,வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ராஜா, பஞ்சாயத்து தலைவர் உடையார் பாண்டியன் உள்ளிட்டோர் தலையில் முக்காடு போட்டபடி வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த புயல் மழையின் காரணமாக உளுந்து பாசி மக்காச்சோளம் பருத்தி மிளகாய் செடி வாழை நெல் உள்ளி உள்ளிட்ட அனைத்து பயிர்களும் முழுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொதை முழுமையாக வழங்க வேண்டும் என்று பலமுறை காங்கிரஸ் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பலமுறை மனு அளித்தும் முழுமையாக உளுந்து பாசிக்கு இன்சூரன்ஸ் தொகை ஒரு ஊரில் பாதிப்பேருக்கு வழங்கி பாதிப்பேருக்கு வழங்காமலும் உள்ளது. அதுமட்டுமல்ல தொகை கணக்கீடு செய்ததில் பாரபட்சமாக கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஒரே தாலூகாவில் ஊருக்கு ஊர் தொகை கணக்கீடு செய்ததில் பல்வேறு ஏற்பட்டு உள்ளது. புயல் காரணமாக குளறுபடிகள் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆகவே கயத்தாறு தாலுகா கோவில்பட்டி தாலுகா விளாத்திகுளம் தாலுகா ஓட்டப்பிடாரம் தாலுகா என அனைவருக்கும் பயிர் இன்சூரன்ஸ் 100% பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் மக்காச்சோளம் இன்சூரன்ஸ் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
கயத்தாறு தாலுகாவில் கடம்பூர் சிதம்பராபும் திருமலாபுரம் கோடங்கால் குப்பனாபுரம் ஒட்டுடன்பட்டி சொக்கலிங்காபுரம் நொச்சிகுளம் காப்புலிங்கம்பட்டி அகிலாண்டபுரம் என அனைத்து ஊர்களிலும் உளுந்து பாசி மக்காச்சோளம் பருத்தி என அனைத்து பயிர்கள் முழுமையாக அழுகிவிட்டது ஆகவே அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இன்சூரன்ஸ் தொகை 2023-24 முழுமையாக பயிர் இன்சூரன்ஸ் முழு தொகை 100% கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது..
