கோவில்பட்டியில் எலும்புமுறிவு டாக்டர்கள் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டியில் எலும்பு முறிவு டாக்டர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள்.
நெல்லை ஆர்த்தோ கிளப், ஐஓஏ, டிஎன்ஓஏ சார்பில் கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இனாம் மணியாச்சி சிக்னல் அருகே உள்ள கோவில்பட்டி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து இருசக்கர வாக பேரணி புறப்பட்டது.
டாக்டர் சுரேஷ்குமார்- (ஆசிரியர் டிஎன்ஓஏ), டாக்டர் தாமோதரன் (செயலாளர் என்ஓசி), டாக்டர் சஞ்சய், டாக்டர் மனோஜ்குமார் ஆகியோர் தலைமையில் பேரணி தொடக்கி வைக்கப்பட்டது.
ஹெல்மெட், சீட் பெல்ட் வேண்டும் என்போம், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை வேண்டாம் என்போம் என்ற கருத்தை விளக்கும் வகையில் பேரணி அமைந்து. இருந்தது. நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்ற பேரணி இறுதியில் தொடங்கிய இடத்தில் முடிந்தது.
பேரணி முடிவில் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி, ஆரோக்கியமான எலும்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது.
