கோவில்பட்டி இரட்டை கொலையில் 3 பேர் கைது- திடுக்கிடும் தகவல்கள்

கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது 50). இவர் ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயில் அருகே மீன் மற்றும் கோழி கடை நடத்தி வந்தார். அதே கடையில் மேலப்பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த மகாராஜா என்ற சாமி (55) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
நேற்றுமுன்தினம் இரவு இருவரும் மீன் கடையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவுக்கு பிறகு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த வந்த 3 பேர், கடைக்குள் புகுந்து இருவரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இந்த சம்பவத்தில் சாமி அதே இடத்தில இறந்து போனார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த வெள்ளத்துரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனார்.
இரட்டைகொலை தொடர்பாக மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ்ஆனந்த், கயத்தார் இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கிடைத்த ஆதரங்கள் அடிப்படையில் வெள்ளத்துரை, சாமி ஆகியோரை வெட்டிக் கொலை செய்தது கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 3வது தெருவைச்சேர்ந்த காளிமுத்து மகன் சேர்மக்கனி (32), மந்தித்தோப்பு பால்சாமி மகன் மாரிராஜ் (32), இனாம்மணியாச்சி தங்கப்பாண்டி மகன் கார்த்திக் (32) என்பது தெரிய வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று மதியம் 1 மணியளவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சேர்மக்கனி உள்ளிட்ட 3 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தொழில் போட்டியில் வெள்ளத்துரை, சாமி இருவரையும் கார்த்திக் அவரது கடையில் செய்தது தெரிய வந்தது.
போலீஸ் விசாரணையில்,கைதான கார்த்திக், வெள்ளத்துரையின் கடையில் இருந்து 4 கடைகள் தள்ளி மீன் கடை வைத்துள்ளார். அவரது கடையில் வியாபாரம் சுமாராக நடந்துள்ளது.ஆனால் வெள்ளத்துரை கடையில் வியாபாரம் அமோகமாக நடந்ததால் திட்டமிட்டு இந்த கொலை நடத்துள்ளது.
கொலைசெய்யப்பட்ட வெள்ளத்துரை மனைவி சண்முகத்தாய். இவர்களுக்கு செல்வம் என்ற செல்லத்துரை (27) என்ற மகனும், கற்பகவள்ளி (25) என்ற மகளும் உள்ளனர்.
கொலை செய்யப்பட்ட இன்னொருவரான மகாராஜா என்ற சாமியின் மனைவி மல்லிகா மற்றும் மகன், மகள் ஆகியோர் சென்னையில் உள்ளனர்.
.
