• June 7, 2025

4 வது நாள் போட்டி: சென்னை அணியை வீழ்த்திய கர்நாடகா

 4 வது நாள் போட்டி: சென்னை அணியை வீழ்த்திய கர்நாடகா

கோவில்பட்டி செயற்கை  புல்வெளி மைதானத்தில் இலட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான  அகில இந்திய ஆக்கி போட்டிகள் நடந்து வருகிறது.

போட்டியின் 4 ம் நாளான இன்று (திங்கள்கிழமை)  காலை 7 மணியளவில் நடைபெற்ற 13வது லீக் போட்டியில் சென்னை, ஜிஎஸ்டி & சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் கர்நாடகா, ஹாக்கி பெல்லாரி அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்தில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் ஆனந்த்.ஹெச்.எம். பெனால்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார்.  

18-வது நிமிடத்தில் கர்நாடகா  அணி வீரர் ராகுல்.சி.ஜே., பீல்டு கோல் முறையில் அடுத்த கோல் போட்டார்.

35-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் பாலாஜி பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

57-வது நிமிடத்தில் கர்நாடகா  வீரர் ஆனந்த்.ஹெச்.எம். பெனால்டி ஸ்ட்ரோக் முறையில் ஒரு கோல் போட்டார்.

60-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் அபிஷேக் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் போட்டார்.

இறுதியில் 3:2 என்ற கோல் கணக்கில் கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வெற்றி பெற்றது.

பாலாஜி குமார், சரவணன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.சிறந்த ஆட்டக்காரர் விருது கர்நாடகா ஹாக்கி பெல்லாரி அணி வீரர் ராகுல்.சி.ஜே.வுக்கு வழங்கப்பட்டது. 

இன்று மாலை ஆட்டங்கள்

இன்று மாலை 5.15 மணியளவில் நடைபெறும் 14வது லீக் போட்டியில் சென்னை, அக்கவுண்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் நியூ டெல்லி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அணியும் மோதுகின்றன.

மாலை 6.45 மணியளவில்  15வது லீக் போட்டியில் சென்னை, இன்டக்ரல் கோச் பேக்டரி அணியும் பெங்களூரு, கனரா பேங்க் அணியும் மோதுகின்றன.

இரவு 8.15 மணியளவில்  16வது லீக் போட்டியில் கோவில்பட்டி, எஸ்டிஏடி எக்ஸலன்ஸ் அணியும் நியூ டெல்லி, சென்ட்ரல் செக்ரிட்டேட் அணியும் மோதுகின்றன.

நேற்றைய மாலை போட்டி முடிவுகள்

நேற்று மாலை 5.15 மணியளவில் நடைபெற்ற 10வது லீக் போட்டியில் மும்பை யூனியன் பேங்க் அணியும் போபால்  நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணியும்  மோதின இதில் 4:1 என்ற கோல் கணக்கில் போபால்  நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ் அணி வெற்றி பெற்றது.

பாலாஜி குமார் , முனவர் பாஷா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது போபால்  நேஷனல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்  அணி வீரர் விஷ்வாஸ்க்கு வழங்கப்பட்டது. 

மாலை 6.45 மணியளவில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் சென்னை இந்தியன் பேங்க் அணியும் சென்னை தமிழ்நாடு லெவன் அணியும்  மோதின. இதில் 1:1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது

அஸ்வனி குமார் ,சுரேஷ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது தமிழ்நாடு லெவன் அணி வீரர் கவுதமுக்கு வழங்கப்பட்டது. 

இரவு 8.15 மணியளவில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணியும் ஹைதராபாத் ஸ்போர்ட்ஸ் ஆதாரிட்டி ஆப் இந்தியா அணியும் மோதின. இதில் 2:1 என்ற கோல் கணக்கில் புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வெற்றி பெற்றது.

பிரியாஸ் கவுடா , சுப்பையா தாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.சிறந்த ஆட்டக்காரர் விருது புபனேஸ்வர் நிஸ்வாஸ் அணி வீரர் மத்தியாஸ் டாங்க்கு வழங்கப்பட்டது. 

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *