• April 30, 2024

திருமாவளவன் பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல்

 திருமாவளவன் பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி விசிக வேட்பாளர் :திருமாவளவன் தொகுதி முழுவதும் சென்று தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அவர் காட்டுமன்னார்கோவில், சேத்தியாதோப்பு, புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார்.

புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் மருதூர், நத்தமேடு, ஆலம்பாடி, குமுடமூலை கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள் திருமாவளவன் பிரசார வண்டியை தடுத்து நிறுத்தி எங்கள் ஊருக்கு மீண்டும் வர வேண்டுமென வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு திருமாவளவன் மீண்டும் நான் வருவேன் என்று தெரிவித்தார்.ஆனாலும் வாலிபர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். திருமாவளவன் கண் முன்னே இந்த மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி மோதலில் ஈடுப்பட்டவர்களை கலைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

advertisement by google

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *