இருசக்கர வாகனத்தில் மோதிய கார் கவிழ்ந்து 6 பேர் பரிதாப சாவு
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரம் மாரியம்மன் கோவில் பூமிதி விழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று இருந்தார். விழா முடிந்து ஊருக்கு திரும்பினார்.
இன்று காலை தளவாய் புறத்தில் இருந்து மதுரைக்கு விருதுநகர் வழியாக வந்து கொண்டிருந்தார். காரை மணிகண்டன் ஓட்டினார். காலை 6,30 மணி அளவில் சிவரக்கோட்டை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த நிலையூரை சேர்ந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டி (35) என்பவர் மோதிய காரம் டிரைவரின் கட்ட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபுறம் பாய்ந்து தடுப்பை உடைத்து கொண்டு கவிழ்த்தது.
இந்த் விபத்தில் காரில் இருந்த கனகவேல்( வயது 65), அவரது மனைவி கிருஷ்ணகுமாரி(55),உறவினர் நாகஜோதி (28), இரட்டை குழந்தைகள் 8 வயது இரட்டை சிறுமிகள் ஆகிய 5 பேரும் இரு சக்கர வாகனத்தில் சென்ற பாண்டி ஆகிய 6 பேர் உயிரிழந்தனர்,
பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட மணிகண்டன் , அவரது 10 வயது மகன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கள்ளிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.