• May 19, 2024

தூத்துக்குடி வாலிபர் கொலை:  6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

 தூத்துக்குடி வாலிபர் கொலை:  6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி அமுதாநகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து மகன் கருப்பசாமி (வயது 27) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக  தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ராஜா (எ) எலி (25), ஜெயசீலன் மகன் ஆரோன் (எ) ஆரோன் தயாளன் (22), பூவையா மகன் பூபதிராஜா (எ) விஜய் (எ) பூபதி (19), நாகராஜ் மகன் சுடலைமணி (எ) சுடலை (21), தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த சாமி மகன் தமிழரசன் (எ) ஆல்பர்ட் (20) மற்றும் தூத்துக்குடி பக்கிள்புரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ராஜேஷ் (20) ஆகிய 6 பேரை  தென்பாகம் போலீசார் கைது செய்தனர். 

கைதான 6  பேர் மீதும்  குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா அளித்த அறிக்கையின்படி   தூத்துக்குடி மாவட்ட காவல் =

கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி , கைதான 6 குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்படி 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைத்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *