பா ஜனதா கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இணைந்தது

பாராளுமன்ற தேர்தலில் ஒட்டிய பாஜக கட்சி தலைமையில் தனி கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் ஏசி சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், ஜி கே வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்ட சிலரின் கட்சிகள் இணைந்துள்ளன.
இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது. கட்சியின் தலைவர் சரத்குமார், பாஜக தலைவர்களை நேற்று சந்தித்து அக்கட்சியின் கூட்டணியில் இணைந்து கொண்டார். அவருடன் மனைவி ராதிகா சென்றிருந்தார்.
இதைத்தொடர்ந்து சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் பிப்ரவரி 28ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
அதில் ஒருமித்த கருத்துக்கள் உடன்பட்டதால் நேற்று (5.3.24) மத்திய மந்திரி எல் முருகன் அவர்கள் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா, தமிழர் பொறுப்பாளர் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீனு உடைய பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக நடத்தினார்கள்.
சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்ட குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே எனக்கு பாராளுமன்ற தேர்தலில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை வழங்கி, எடுக்க முடிவுக்கு கட்டுப்படுவோம் என்ற உத்தரவாதம் அளித்ததின் அடிப்படையில், நாடு வளம் பெற ஒற்றுமை உணர்வு ஓங்கிட மீண்டும் நல்லாட்சி அமைந்திட நரேந்திர மோடியை பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சி இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளேன். மற்ற விவரங்களை இன்னும் ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கிறேன். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.
