தெற்கு திட்டங்குளத்தில்” மாற்றத்தை தேடி” சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களிடம் “மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஹேமா மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு திட்டங்குளம் பகுதியில் பெண்களிடம் ‘மாற்றத்தை தேடி” விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுவரை 3854 “மாற்றத்தை தேடி விழிப்புணர்வு கூட்டங்கள் மூலம் மாற்றத்தை தேடி” என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல்துறையினர் மூலம் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு சுமார் 1,21,345 பேர் தூத்துக்குடி மாவட்டத்தை குற்றமில்லாத மாவட்டமாக உருவாக்குவதற்கு 36 வகையான கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுத்து இருக்கிறார்கள்.
