• June 7, 2025

கோவில்பட்டி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

 கோவில்பட்டி சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி

 கோவில்பட்டியில் உள்ள நீலா தேவி பூதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு  இன்று அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

 5 மணிக்கு திருமஞ்சனம், 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அதிக அளவில் திரண்டு  இருந்தனர்.

  காலை 6 மணிக்கு சுந்தர்ராஜ பெருமாள் சயன கோலத்தில்  எழுந்தருளினார். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு,உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதி ராஜன், நிருத்திய லட்சுமி என்ற சுதா, ரவீந்திரன், தொழிலதிபர் மகாலட்சுமி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று மாலை 6 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடத்தது. மேலதாளம் முழங்க சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளினார்.

வைகுண்ட ஏகாதசிநாளில் சொர்க்க வாசல் வழியாக பெருமாளை தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இதனால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து இருந்தனர். அவர்கள் இறைவனை தரிசித்து அருள் பெற்று சென்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *