மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை மாட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி கூட்டம் கலெக்டர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலரும் மாவட்ட கிரீன் கமிட்டி செயலருமான.மு. மகேந்திரன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில். மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ்.ஜே. கென்னடி. பேசுகையில், “சாலை ஓரங்களிலும், தெருக்களிலும் உள்ள மரங்களில் பல தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகையை ஆணி அடித்தும் மற்றும் இரும்பு கம்பியால் கட்டி வைத்து உள்ளனர். இதனால் மரங்கள் உளுத்து உறுதி தன்மையற்று போகிறது. இதனால் மரங்களின் ஆயுள் தன்மையை குறைந்து விரைவில் மரம் பட்டு விழுந்து விடுகிறது”. என்று குறிபிட்டார்.
இதற்கு கலெக்டர் கோ.லட்சுமிபதி பதில் அளிக்கையில், அவ்வாறு மரங்களை சேதப்படுத்தும் நிறுவனங்களின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு, வளர்த்து பசுமை நிறைந்த மாவட்டமாக உருவாக்க வேண்டும்’ என்றார்.
கூட்டத்தில் சப் கலெக்டர் கவுரவ் குமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் குரு சந்திரன், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் உட்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
