ஜெயலலிதா நினைவிடத்தில் கடம்பூர் ராஜு அஞ்சலி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர்.கடம்பூர் ராஜு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா. மாவட்ட கழக இணைச் செயலாளர் பேச்சியம்மாள். மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன். ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் கண்ணன் கழக நிர்வாகிகள் தாமோதரன். கோபி. முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
