பெங்களூருவில் கட்டுமான உபகரணங்கள் கண்காட்சி; கோவில்பட்டி `SAZS’ APPS நிறுவனம் பங்கேற்கிறது

கர்நாடக மாநிலம் பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் தெற்கு ஆசிய அளவிலான மிகப்பெரிய கட்டுமான உபகரணங்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.
வருகிற 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சிக்கு Excon (எக்ஸ்கான்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாளைய இந்தியாவை உருவாக்குவோம் என்ற குறிக்கோளுடன் நடக்கும் இந்த கண்காட்சியில் 15 நாடுகளை சேர்ந்த 80 ஆயிரம் வணிக பார்வையாளர்கள் பங்கேற்கிறார்கள்.
3 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் நடக்கும் இந்த பிரமாண்ட கண்காட்சி திடலில் 6 நாடுகளில் இருந்து 1200 கண்காட்சியாளர்கள் அரங்குகள் அமைக்கிறார்கள்.
கண்காட்சியில் அரங்குகள் அமைக்கும் நிறுவனத்தினர் தங்கள் தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து முக்கிய நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கும் சூழலில் தென் மாவட்டங்களில் இருந்து கோவில்பட்டியில் செயல்படும் SAZS APPS நிறுவனம் பங்கேற்கிறது.
மேலாண்மை மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் செங்கல், குவாரி, கிரஷர், ரெடிமிக்ஸ் ஆகியவற்றுக்கான செயலிகளை உருவாக்கி கொடுக்கிறது.
“எங்கள் செயலியை உருவாக்குவதன் மூலம் 30 சதவீதம் வரை கூடுதல் லாபம் சம்பாதிக்க முடியும். நிறுவன தகவல்கள் திருட்டு போகாமல் பாதுகாக்கப்படுகிறது. செயலியின் 24 மணி நேரம் பராமரிப்பு எங்களுடையது.” என்று SAZS APPS உரிமையாளர் செல்வராணி தெரிவித்தார்.
பெங்களூரு கண்காட்சியில் எங்கள் குழுவில் 10 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறோம். எங்களுக்கான அரங்கம்’ C 55 ஹால் 4 ‘ இல் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் டி.வி.மற்றும் லேப்டாப் மூலம் எங்கள் சாப்ட்வேர் டெமோ கொடுப்போம். என்றும் அவர் கூறினார்.
பெங்களூரு கண்காட்சியில் பங்கேற்க SAZS APPS குழுவினர் கோவில்பட்டியில் இருந்து 10-ந்தேதி (நாளை)புறப்பட்டு செல்கிறார்கள். இந்த நிறுவனம் தொடங்கி 4 வருடத்தில் 1௦௦-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பெருகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
