கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் மைதானத்தில் சூரசம்ஹாரம்

கோவில்பட்டி செண்பகவல்லி_அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது.
நேற்று சனிக்கிழமை
காலை 10 மணிக்கு மேல் வள்ளி தெய்வயானை சமேத சண்முகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
காலை 11 மணிக்கு மேல்
வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மேல் கோவில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர். அவர்கள் முன்னிலையில் சூரபத்மன் அரக்கனை முருகப்பெருமான் வதம் செய்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
