• June 7, 2025

கோவில்பட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம்

 கோவில்பட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு பேரவைக்கூட்டம் கோவில்பட்டி ஜீவா இல்லத்தில் நடைபெற்றது,

கூட்டத்திற்கு சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச்செயலாளர் பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன், மாவட்ட துணைச்செயலாளர் பாபு,மாவட்ட குழு உறுப்பினர் பரமராஜ், நகரச்செயலாளர் சரோஜா ஆகியோர் உரையாற்றினார்கள்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற நகரச் செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், தாலுகா செயலாளர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 5 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது, அதன் ஒருங்கிணைப்பாளராக சுரேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

நவம்பர் மாத இறுதிக்குள் மாவட்டம் முழுவதும் 5,000 உறுப்பினர்களை சேர்ப்பது ,2024 ஜனவரியில் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *