அரசு திட்டங்களின் பயன்கள், அனைத்து தரப்பினருக்கும் சேர நடவடிக்கை; தூத்துக்குடி புதிய கலெக்டர் லட்சுமிபதி உறுதி

தூத்துக்குடி மாவட்ட 27வது கலெக்டராக லட்சுமிபதி, இன்று (20.10.2023) பதவியேற்றுகொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் முழுமையாக வளர்ச்சி அடைவதற்கு தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் அதாவது அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அனைத்து திட்டங்களும் முழுமையாக அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்துவது என்பது எனது செயல்பாடுகளில் முக்கியமாக இடம்பெறும்.
அதைத்தவிர அடிப்படை வசதிகள் அனைத்து பகுதிகளிலும் குடிநீர், சாலை வசதி, பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்ற அனைத்து அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள் அதை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
பொதுமக்கள் இணையவழி சேவை வழியாக பெறக்கூடிய சான்றிதழ்கள், அதைத்தவிர முதல்வரின் முகவரி, மக்கள் குறைதீர்க்கும் நாள், விவசாயிகள் குறைதீர்க்கம் நாள், மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், மாற்றுத்திறனாளிகள் குறைதீாக்கும் நாள் ஆகியவற்றில் பெறப்படும் மனுக்கள் இவை அனைத்தும் விரைவாகவும், உரிய முறையிலும் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் அவசியம் எடுக்கப்படும்.
குறிப்பாக அரசின் பல்வேறு முதன்மை திட்டங்கள், முக்கிய திட்டங்கள், முத்திரை பதிக்கும் திட்டங்கள் ஆகியவற்றை அவ்வப்போது ஆய்வு செய்து துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையான தொழில் துறை மேம்படுத்துவதற்கு உகந்த சூழ்நிலை உள்ள மாவட்டமாகும்.
இங்கு ரெயில் வசதி மட்டுமல்லாமல் துறைமுகம், விமான நிலையம் என்ற வசதிகள் எல்லாம் முறையாக செய்து கொடுக்கும் பட்சத்தில் தொழில்வளர்ச்சி சிறப்பாக அமையும். அதற்கான முழு முயற்சிகளும் கண்டிப்பாக எடுக்கப்படும்.
கள ஆய்வு என்பது மிக முக்கியம். அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்கள் முழுமையாக மக்களை தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைகிறதா என்பதும் அவ்வப்போது கண்காணிக்கப்படும். அதற்கான முயற்சிகளையும் நான் கண்டிப்பாக எடுப்பேன். சட்டம் ஒழுங்கைப் பொறுத்தவரை காவல்துறையுடன் இணைந்து முறையாக கண்காணிக்கப்படும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களை களைய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதைத்தவிர வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான காலம் வந்திருக்கிறது. அதனால் அதற்கான முன்னேற்பாடு நடடிக்கைகள் அது எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். டெங்கு தடுப்பு நடவடிக்கைள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்து அதற்கான தடுப்பு பணிகளும் முழு அரசின் அனைத்து திட்டங்களுடைய பயன்கள், அனைத்து தரப்பினருக்கும் சென்றடைவதற்கான கள ஆய்வு மேற்கொள்ளப்படும்
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான காலம் வந்திருக்கிறது. அதனால் அதற்கான முன்னேற்பாடு நடடிக்கைகள் அது எந்த அளவுக்கு இருக்கிறது என்று ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். டெங்கு தடுப்பு நடவடிக்கைள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்து அதற்கான தடுப்பு பணிகளும் முழுமையாக முடுக்கி விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று இருக்கிறேன். உடனடியாக செய்ய வேண்டியது என்று அரசு சிலவற்றை தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்களுக்கு வங்கி கடன் மேளா இன்னும் ஒரு இரண்டு வார காலத்திற்குள் முக்கிய நிகழ்வாக தேவையான மாணவர்களுக்கு கடன் வசதி செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். அந்த மேல்முறையீட்டில் ஒரு வாரத்திற்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அனைத்து திட்டங்களுடைய பயன்கள், அனைத்து தரப்பினருக்கும் சென்றடைவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். அதில் அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக பின்பற்றப்படும். அதுசம்பந்தமான அனைத்து விவரங்களையும் ஊடக நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறோம். அதைப்போல இந்த அரசு திட்டங்கள் பற்றி முறையாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் லட்சுமிபதி கூறினார்..
பேட்டியின் போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ்குமார், ஆகியோர் இருந்தனர்.
