திருப்பூர் அருகே கிராம மக்கள் சாலை மறியல்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருப்பூரில் இன்று மாலை சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. 4.30 மணி அளவில் திருப்பூர் அருகே கோவில்பாளையம் என்ற கிராமத்தில் சாலையோரம் இரு சக்கர வாகனங்களில் வந்த சிலர் மழைக்கு ஒதுங்கி நின்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனம் மோதியதில் 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன. மேலும் ஒரு பெண் காயம் அடைந்தார்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையம் சென்று விவரம் தெரிவித்தனர்.
இதற்கு இடையே விபத்து நடந்த இடத்தில் கோவில்பாளையம் கிராம மக்கள் குவிந்து விட்டனர்.அவர்கள் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் செய்தனர்.
இதனால் சாலையின் இருமார்க்கத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சு நடத்தினார்கள். நீண்ட நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு கிராம மக்கள் சமரசம் அடைந்தனர்.
மாலை 5 மணிக்கு தொடங்கிய சாலை அப்ப்பாட்டுமறியல் போராட்டம் இரவு 7 மணிக்கு விலக்கி கொள்ளப்பபட்டது. அதன்பிறகு அணிவகுத்து நின்ற வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.