கோவில்பட்டி ரெயில்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

செப்டம்பர் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஜேசிஐ வாரம் கடைபிடிக்கபடுகிறது. இவ்வாரத்தில் மரக்கன்று நடுதல், தானம் செய்தல், முன்னாள் தலைவர்களை கவுரப்படுத்துதல், கடைநிலை ஊழியர்களை பாராட்டுதல் உள்ளிட்ட பல பணிகளை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவில்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் நடந்த மரக்கன்று நடும் பணிக்கு ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ், ரெயில்வே பாதுகாப்பு படை காவலர் முருகானந்தம், செயலாளர் சூர்யா, இணை செயலாளர் அருண் பிரசாத், நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன், தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, கால்நடைதுறை குமார் உள்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டினர்.
