இன்றைய மின்தடை செவ்வாய்க்கிழமைக்கு மாற்றம்

கோவில்பட்டி நகர் , புறநகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக 19.8.23 சனிக்கிழமை (இன்று) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை மின்தடை அறிவிப்பு நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப் பட்டுள்ளதாக செயற் பொறியாளர் எஸ். காளிமுத்து அறிவித்தார். மேலும் இன்றைய மின்தடை செவ்வாய்க்கிழமைக்கு (22-ந்தேதி) மாற்றம் செய்யபப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மின்சப்ளை இருக்காது.
இதே போல் பலமுறை மின்வாரியத்தின் மின்தடை அறிவிப்பில் குளறுபடி நடந்துள்ளது. காலையில் அறிவிப்பு வெளியிடுவதும், மாலையில் ரத்து செய்வதும் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. முதலில் அறிவிக்கும்போதே எல்லா நிர்வாக காரணங்களையும் ஆராய்ந்து பார்ப்பது இல்லையா? அறிவிப்பு வெளியிட்டபிறகு தான் நிர்வாக காரணங்கள் தெரிகிறதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி விடுத்துள்ளனர்.
