திருநெல்வேலி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல்

திருநெல்வேலி – பாலக்காடு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து மத்திய ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி வண்டி எண் 16791 பாலக்காடு – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் பாலக்காடு ரெயில் நிலையத்திலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 4.50க்கு திருநெல்வேலி வந்தடையும். காலை 7 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும்.
வண்டி எண் 16792 தூத்துக்குடியில் இருந்து இரவு 9.25க்கு புறப்படும். இரவு 11.20க்கும் நெல்லை சென்றடையும். மறுநாள் பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரெயில் விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலக்காடு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தூத்துக்குடி – பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது..
