அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் விதிகளை மீறிய வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில், வீரன் அழகுமுத்துக்கோன் 313வது பிறந்தநாள் விழா (11.7.23) அன்று கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள உருவசிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் வந்தனர்.
இருசக்கர வாகன பேரணி செல்வதற்கு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் பெண்கள் மற்றும் பொதுமக்களை இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமலும் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 45 இருசக்கர வாகனங்கள் மீது 110 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும், 65 நான்கு சக்கர வாகனங்கள் மீது 150 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர 22 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் மீதும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி வழக்குகளில் தேவைப்படும் பட்சத்தில் உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி தொடர்புடைய வாகனங்களை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேசுக்கு மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
.
