தொழுநோய் ஊன தடுப்பு முகாம்

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொழுநோய் ஊனத்தடுப்பு மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது,. உறைவிட மருத்துவ அலுவலர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் *தொழுநோய்) டாக்டர் யமுனா, ஊனத்தடுப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி நோயாளிகள் விழிப்புணர்வு உரையாற்றினார், முகாமின்போது 19 பேருக்கு சிகிச்சை மற்றும் நல உதவிகள் வழங்கபட்டன,
மேலும் இயற்கை சிகிச்சை மருத்துவர் திருமுருகன், சிகிச்சை உதவியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் பயனாளிகளுக்கு உணவு முறை மாறும் யோகா பயிற்சியின் நன்மைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

முகாமில் துணை இயக்குனர்(தொழுநோய்)அலுவலக நலகல்வியாளர் செல்லப்பாண்டியன், மருத்துவமனை மேற்பார்வையாளர் ஜான்ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, சின்னத்தம்பி, சண்முகசுந்தரம், ஆய்வக நுட்பனர் பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் செண்பகமூர்த்தி செய்திருந்தார்.
