• June 7, 2025

ஊராட்சி மன்ற துணை தலைவர் இருக்கை விவகாரம்; கோட்டாட்சியர் விசாரணை – அதிரடி உத்தரவு

 ஊராட்சி மன்ற துணை தலைவர் இருக்கை விவகாரம்;  கோட்டாட்சியர் விசாரணை – அதிரடி உத்தரவு

கோவில்பட்டி அருகே உள்ள காலங்கரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக கனகலட்சுமி, துணைத் தலைவராக கெச்சிலாபுரம் பகுதியைச் சேர்ந்த பட்டியல் இனத்தை சேர்ந்த சுந்தரலட்சுமி ஆகியோர்  செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்ற கூட்டம் நடந்தபோது தனக்கென ஒதுக்கப்பட்ட துணை தலைவரின் நாற்காலி  

சேதப்படுத்தப்பட்டு இருந்ததாகவும் , வேண்டுமென்றே ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இப்படி  செய்ததாகவும் தன்னை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி துணைத் தலைவர் புகார் கூறினார்.

மேலும் தனக்கான இருக்கை வரும் வரை அனைத்து கூட்டத்திலும் தான் தரையில் அமர்ந்து பங்கேற்க உள்ளதாகவும்

அவர் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற  துணைத்தலைவர் சுந்தரலட்சுமியை  அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து  ஊராட்சி தலைவர், துணைத் தலைவருக்கு ஒன்று போல் இருக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

.மேலும் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை முதல் தகவல் அறிக்கை பதியப்படவில்லை

என்று சுந்தரலட்சுமி  தெரிவித்தார், அதற்கு கோட்டாட்சியர் மகாலட்சுமி . இதுகுறித்து விசாரணை நடத்தி

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *