தென்காசி, தூத்துக்குடியில் 4 நாட்கள் சீமான் சுற்றுப்பயணம்; கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் 19-ந்தேதி பேசுகிறார்

தென்காசி, தூத்துக்குடியில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டு தொகுதி கலந்தாய்வு கூட்டத்தை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்துகிறார்.
வருகிற 16-ந்தேதி காலை 1௦ மணிக்கு தென்காசியில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,கடையநல்லூர் தொகுதி நிவாகிகள் கலந்தாய்வு நடக்கிறது, இரவில் தென்காசியில் தங்குகிறார்,.
17-ந் தேதி காலை 10 மணிக்கு தென்காசி, ஆலங்குளம் தொகுதிகள் கலந்தாய்வு நடக்கிறது. அன்று மாலையில் தென்காசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சீமான் பேசுகிறார். இரவில் திருநெல்வேலியில் தங்குகிறார்.
18-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதி கலந்தாய்வு கூடத்தில் சீமான் கலந்து கொள்கிறார். இரவில் திருநேல்வேல்யில் தங்குகிறார்.

19-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் நடக்கும் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி தொகுதிகள் கலந்தாய்வு கூட்டத்தில் சீமான் பங்கேற்கிறார்.
பின்னர் மாலை 5 மணிக்கு கோவில்பட்டியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார். அன்றைய தினம் இரவு திருநெல்வேலியில் தங்குகிறார்,.
