கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முத்துமாரியம்மன் கோயில் விழாவில் திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் ஸ்ரமுத்துமாரியம்மன், ஸ்ரகருப்பசாமி கோயில் கொடை விழா கடந்த மே 30ம்தேதி கணபதி ஹோமம் மற்றும் நாட்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 3ம்தேதி இரவு 7 மணிக்கு சங்கரேஸ்வரி ஐயப்பன் பஜனை குழுவினரின் கலை நிகழ்ச்சியும், 4ம்தேதி இரவு 7 மணிக்கு தேவர் திருமகனார் இளைஞரணியின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
5ம்தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் மற்றும் ஊர் விளையாடுதல் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சங்கரேஸ்வரி ஐயப்பன் பஜனை குழுவின் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜையும், அதன்பிறகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நேற்று (6ம்தேதி) காலை 8 மணிக்கு அக்னிசட்டி வளர்ப்பு, இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, கருப்பசாமி வேட்டைக்கு செல்லுதல் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று (7ம்தேதி) மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெயிலுமுத்துப்பாண்டியன் தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணன், சுப்பையா, செல்லத்துரை, மனித உரிமை காக்கும் கட்சி மாவட்ட செயலாளர் சிவன்சங்கர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
