• June 7, 2025

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முத்துமாரியம்மன் கோயில் விழாவில் திருவிளக்கு பூஜை

 கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முத்துமாரியம்மன் கோயில் விழாவில் திருவிளக்கு பூஜை

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் ஸ்ரமுத்துமாரியம்மன், ஸ்ரகருப்பசாமி கோயில் கொடை விழா கடந்த மே 30ம்தேதி கணபதி ஹோமம் மற்றும் நாட்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 3ம்தேதி இரவு 7 மணிக்கு சங்கரேஸ்வரி ஐயப்பன் பஜனை குழுவினரின் கலை நிகழ்ச்சியும், 4ம்தேதி இரவு 7 மணிக்கு தேவர் திருமகனார் இளைஞரணியின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

5ம்தேதி திங்கள் கிழமை காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அக்னி சட்டி எடுத்தல் மற்றும் ஊர் விளையாடுதல் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சங்கரேஸ்வரி ஐயப்பன் பஜனை குழுவின் 10ம் ஆண்டு திருவிளக்கு பூஜையும், அதன்பிறகு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

நேற்று (6ம்தேதி) காலை 8 மணிக்கு அக்னிசட்டி வளர்ப்பு, இரவு 7 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை, கருப்பசாமி வேட்டைக்கு செல்லுதல் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து இன்று (7ம்தேதி) மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வெயிலுமுத்துப்பாண்டியன் தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணன், சுப்பையா, செல்லத்துரை, மனித உரிமை காக்கும் கட்சி மாவட்ட செயலாளர் சிவன்சங்கர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *