கோவில்பட்டி தியேட்டரில் ரசிகர்களை சந்தித்த நடிகை செல்பி எடுத்து மகிழ்ச்சி

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பிரபு பாக்கியராஜ் நடிகை சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடித்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 2ந்தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. கோவில்பட்டியில் சத்யபாமா சினிமாஸ் அரங்கில் திரையிடப்பட்டு இருக்கிறது.
இந்த சினிமா தியேட்டருக்கு நேற்று மாலை காட்சி தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்னதாக படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி திடீரென வருகை தந்தார். இது பற்றி அறிந்ததும் அவரை ரசிகர்கள் மொய்த்துக்கொண்டனர். ரசிகர்களிடம் இத்னானி உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-
“இந்தப் படத்திற்காக 3 மாதம் கோவில்பட்டியில் தங்கியிருந்தேன். கோவில்பட்டி மக்களுடன் நல்ல நட்பு இருக்கிறது,, கோவில்பட்டி என்னுடைய வீடு போன்ற உணர்வு இருக்கிறது. கோவில்பட்டி மக்கள் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணாங்க, அவங்க வீட்டு பொண்ணு மாதிரி என்ன பாத்துக்கிட்டாங்க, இந்த ஊர் மக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இது உங்களுடைய படம், உங்கள் நண்பர்கள் குடும்பத்தினரிடம் சொல்லி திரையரங்குகளில் பார்க்கச் சொல்லுங்கள் , அனைவருக்கும் நன்றி, இது நம்ம படம், உங்களுடன் பேசியது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.’
பின்னர் திரையரங்கில் இருந்த ரசிகர்கள் பொதுமக்களுடன்பி எடுத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து நடிகை சித்தி இத்னானி புறப்பட்டு சென்றார்.
