சமந்தாவின் `சாகுந்தலம்’ ரூ.22 கோடி நஷ்டம்; தயாரிப்பாளர் புலம்பல்

நடிகை சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் சாகுந்தலம். குணசேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள
ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்த இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். அதிதிபாலன், கவுதமி, மதுபாலா, மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
வசூல்ரீதியாக பெரிய வெற்றியை இந்த படம் கொடுக்கவில்லை. ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொண்டு உள்ளது. சுமார் 65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 7 கோடி மட்டுமே வசூல் செய்து 22 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சாகுந்தலம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் படு தோல்வி படமாக அமைந்தது குறித்து மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு.
படம் வெளியாவதற்கு முன்னரே பிரபலமான ஓடிடி தளம் ஒன்றுக்கு 35 கோடிக்கு விற்கப்பட்டதால் இழப்பு 22 கோடியோடுபோனது. இல்லையேல் பெரும் நஷ்டத்தை சந்தித்து இருப்பேன்.. எனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை. புராணக்கதையை பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் 3டியில் எடுத்து தேவையில்லாத செலவு செய்து விட்டார். இரண்டு மூன்று காட்சிகள் மட்டுமே படத்தில் 3டி காட்சிகள். அது தேவையில்லாத செலவு. என்றார்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற இந்தி சீரியல் பார்த்தது போல இருந்தது என பல ரசிகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். சமந்தாவை தவிர வேறு எந்த கதாபாத்திரமும் நன்றாக இல்லை என ரசிகர்கள் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். சரியாக பிளான் செய்து ஸ்கெட்ச் போடும் தனக்கு இந்த படம் பெரும் சறுக்கலாக அமைந்து விட்டது என புலம்புகிறார் தில் ராஜு.
