• June 7, 2025

கீழ ஈரால் காமாட்சியம்மன் கோவில் புதிய ஆசான் பட்டம் சூட்டும் விழா; 5-ந்தேதி நடக்கிறது

 கீழ ஈரால் காமாட்சியம்மன் கோவில் புதிய ஆசான் பட்டம் சூட்டும் விழா; 5-ந்தேதி நடக்கிறது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழ ஈரால் காமாட்சியம்மன் திருக்கோவில் நான்கு வகையறாக்கள் நடத்தும் கோவிலாகும்.

இந்த கோவிலின் புதிய ஆசான் பட்டம் சூட்டும் விழா 5-ந் தேதி வெள்ளிகிழமை அதிகாலை  4.30 முதல் 5.50 மணிக்குள் நடைபெறவுள்ளது  மதுரை திருபுவனம் முத்துகாமாட்சிக்கு பட்டம் சூட்டப்படுகிறது.

பிற்பகல்12 மணிக்கு மேல் புதிய ஆசான்  மதுரை திருபுவனம் முத்துகாமாட்சி, 51தெய்வங்களின் அருள் ஆசியுடன் கோவிலின்  திருக்கதவை திறந்து வைக்கிறார்.

மதியம் பூஜை மேளதாளத்துடன் சாம்பிராணி வாசத்துடன் அன்னை ஜோதி சுடராக விளங்கும் ஏகாம்பர ஈஸ்வரிகம்ப காமாட்சிக்கும் 51 தெய்வங்களுக்கும் பூஜை நடைபெறவுள்ளது

புதிய ஆசான் பட்டம் சூட்டுதலை யொட்டி  4 .5 .2023 அன்று மதியம் ,இரவு. மற்றும்  5 .5 .2023 காலை,  மதியம். பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம் என்று  நான்கு வகையறாக்கள். கூறி உள்ளனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *