கோவில்பட்டி அருகே திருவேங்கடத்தில் நாட்டு இன நாய்கள் உரிமை மீட்பு மாநாடு-கண்காட்சி

கோவில்பட்டி அருகே தென்காசி மாவட்டம் திருவேங்கடம் ஸ்ரீநிவாசம் மண்டபம் திடலில் நாட்டு இன நாய்கள் உரிமை மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது.
தென்காசி, விருதுநகர் நாட்டு நாய்கள் வளர்ப்போர் சங்கம் சார்பில் நடத்தபட்ட இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவர் ரவி பச்சமுத்து தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
மாநில அமைப்பு செயலாளர் நாஞ்சில் இருதயராஜ், இளைஞர் அணி துணை செயலாளர் தளபதி தங்கராஜ், ததகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் செந்தில்குமார், தென்மண்டல இளைஞர் அணி செயலாளர் தளபதி துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
இந்திய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர்கள் நெல்லை ஜீவா,ஆனந்த் குமார் உதயசூரியன், இளையவேந்தர் பேரவை மாநில தலைவர் ஆனந்த முருகன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் இளவரசி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ரமேஷ், கொள்கை பரப்பு செயாலாளர் சம்பத்குமார், அமைப்பு செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, முரசொலி, சுரேஷ், இளைஞர் அணி துணை செயலாளர் கணேஷ் கருத்துரை ஆற்றினார்கள்.

நாட்டு நாய்கள் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். நாட்டு நாய்கள் வளர்ப்பு முறை பற்றி அனைவரும் அறிந்திருக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடக்கத்தில் ஆனந்தகுமார் வரவேற்று பேசினார். முடிவில் காளிராஜ் நன்றி கூறினார்.
இந்திய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
மாநாட்டையொட்டி நாட்டு இன நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது வளர்ப்பு நாட்டு நாய்களை கொண்டு வந்து இருந்தனர். அந்த நாய்கள் செய்த சாகசங்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர், சிறந்த நாய்களின் உரிமையாளர்களுக்கு விருது மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன,.
