• June 7, 2025

புனித வெள்ளி: இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாதை; கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடந்தது

 புனித வெள்ளி: இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாதை; கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் நடந்தது

2000 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவை சாவினை கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித வெள்ளி என சிறப்பாக நினைவு கூர்ந்து கொண்டாடி வருகிறார்கள்

பெரிய வியாழனான நேற்று இயேசு கிறிஸ்துவை யூதாஸ் காட்டிக் கொடுத்தபின் யூதர்களால் சிறைபிடிக்கப்பட்டு அவருக்கு மரணத் தீர்ப்பிடப்பட்ட பின் இயேசு கிறிஸ்துவிற்கு தலையில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையை சுமந்து கொண்டு கல்வாரி மலையை நோக்கி காவலர்கள் இழுத்து செல்லும்போது  அவரை சவுக்கால் அடித்து துன்பபடுத்தி அவர் உடல் முழுவதும் ரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டார்.

அந்த சிலுவை மரத்தில் தொங்க விடப்பட்டு பின் அவர் உயிர் பிரிந்தது அந்த உடலை ஒரு வெள்ளை துணியில் போர்த்தி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்

இதை நினைவு படுத்தும்  வகையில் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலத்தில்  புனித வெள்ளி நிகழ்வுகள் இன்று அதிகாலை 5 மணி முதல் மதியம்  3 மணிவரை  தொடர் ஆராதனை நடைபெற்றது

மதியம் 3 மணிக்குமேல்  சிலுவை பாதையான 14  ஸ்தலங்களிலும் இயேசு கிறிஸ்து சிலுவையை சுமந்து செல்லும்போது கீழே விழுதல், காவலர்கள் அவரை சவுக்கால் அடிப்பது, பின்னர் சிலுவையில் அறையப்படுவது என அனைத்து நிகழ்வுகளும் தத்ரூபமாக நடித்துக் காட்டப்பட்டது .

பின்னர் திருத்தல பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ்அடிகளார், பாளை சவேரியார் கல்லூரி பேராசிரியர் லியோலின் ஆரோக்கியதாஸ், தூத்துக்குடி மறைமாவட்ட மாதா தொலைக்காட்சி அருட்திரு அகஸ்டின் அடிகளார் ஆகியோர் இணைந்து திருப்பலி பீடத்தின் முன் முகம் முப்புற விழுந்து கடவுளின் முன்பாக நாம் அனைவரும் வெறுமையே என்று காட்டுவதற்கான நிகழ்வுகள் நடந்தன.

அதை தொடர்ந்து  சிறப்பு இறை வாசகங்களும், மன்றாட்டுக்களும் , நடைபெற்று நற்கருணை பகிர்தலும் சிலுவையை முக்தி  ( முத்தமிடுதல் ) செய்வதும் நடந்தது. இறுதியில் வந்திருந்த இறைமக்கள் அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *