• June 7, 2025

கோவில்பட்டியில் கூடுதலாக மொத்த தினசரி சந்தை கேட்டு பா.ஜனதா மனிதசங்கிலி போராட்டம்

 கோவில்பட்டியில் கூடுதலாக மொத்த தினசரி சந்தை கேட்டு பா.ஜனதா மனிதசங்கிலி போராட்டம்

கோவில்பட்டியில் தற்போது இயங்கும் இடத்திலேயே நகராட்சி தினசரி சந்தை இயங்க வேண்டும். இதை இடித்து விட்டு புதிய சந்தை அமைக்கக்கூடாது. அதற்கு பதிலாக ஒதுக்கப்பட்ட நிதியில் நகர்பகுதியில் வேறு இடத்தில கூடுதல் மொத்த தினசரி சந்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி பஸ் நிலையம் அருகே இன்று மாலை பா.ஜனதா சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.

பாரதீயஜனதா கட்சி சார்பாக கோவில்பட்டி நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் பொதுச் செயலாளர் விஜயகுமார் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் வேல்ராஜ் மாவட்ட துணை தலைவர் ராஜ்குமார் மாவட்ட ஊடக பிரிவு தலைவர் அம்மன் மாரிமுத்து ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கல்யாண கணேசன் பிரசார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமண குமார் சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமணன் மாவட்ட துணை தலைவர் பால முருகேசன், தரவுதளவு மேன்மை மாவட்ட தலைவர் ரகு பாபு ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் நகர நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்/

இவர்கள் ஒருவருக்கொருவர் கைகோர்த்தபடி மனிதசங்கிளியாக இருந்து கோஷம் எழுப்பினார்கள்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *