• June 7, 2025

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரி உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

 கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மானாவாரி உளுந்து சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தூத்துக்குடி மாவட்ட

விவசாயிகளுக்கான “மேம்படுத்தப்பட்ட மானாவாரி உளுந்து சாகுபடி

தொழில்நுட்பங்கள்” பற்றிய பயிற்சி கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் காட்டுநாயக்கன்பட்டி , கிராமத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 வேளாண்மை ஆராய்ச்சி நிலைய தலைவர் கோ. பாஸ்கர் தலைமை தாங்கினர். அவர் பயிற்சி கையேட்டினை வெளியிட்டு பேசும்போது மானாவாரி விவசாயத்தின்  முக்கியத்துவம் குறித்தும் தேர்வு செய்ய வேண்டிய உளுந்து ரகங்கள் மற்றும் அவற்றின் முக்கிய பண்புகள் குறித்தும் குறிப்பிட்டார்.
தொடந்து உதவி பேராசிரியர் மனோகரன், உளுந்து சாகுபடி பற்றிய உழவியல் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்கி பேசினார்.

 உதவி பேராசிரியர் மு. மணிகண்டன் பேசுகையில், மானாவாரி நிலங்களில் மண் மற்றும் மழைநீர் பாதுகாப்பு குறித்து  விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறினார்.

மண்ணியல் துறை  உதவிப் பேராசிhpயர் வீ.சஞ்சீவ்குமார்,, மானாவாரி நிலங்களுக்கு மண் பரிசோதனை செய்வதின் அவசியம் மற்றும் உளுந்து பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை  பற்றியும் அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள் பற்றியும் விளக்கினார்.

முடிவில் முனைவர். உதவி பேராசிரியர் வீ. சஞ்சீவ்குமார், நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *