டீ போட்டபோது விபரீதம்: கியாஸ் கசிவினால் தீப்பிடித்து கணவன்-மனைவி பலி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இந்திரா நகரை சேர்ந்தவர் சண்முகபாண்டி (வயது 70), இவரது மனைவி ராமலட்சுமி (60). கடந்த 1ம் தேதி கியாஸ் அடுப்பை சரியாக அடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மாலையில் டீ போடுவதற்காக ராமலட்சுமி அடுப்பை பற்ற வைத்தபோது கியாஸ் கசிவு காரணமாக கேகுபீர் என்று தீபிடித்தது..உடலில் தீப்பபற்றி அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த சன்முகபாண்டி, தீயை அணிக்க முற்பட்டபோது அவரது உடலிலும் தீப்பிடித்துக்கொண்டது இதனால் . கணவன்-மனைவி இருவரும் உடல் கருகி பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்கள் இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
