கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா
கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளியாட்டுவிலா, ஆண்டுவிழா மாற்றும் தேசிய அளவில் கபடி போட்டிகள் நடத்தப்ப்ட்டன,
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவுக்கு பள்ளிக்கல்விக்குழு தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பே.கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
முன்னாள் மத்திய மந்திரி ஜி,.கே.வாசன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ,கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் ஆகியோர் பரிசு வழங்கினார்கள். ஜார்க்கன்ட் மாநிலத்தில் நடந்த தேசிய கபடி போட்டியில் தமிழக அணி இரண்டாம் பிடித்தது. அந்த அணியில் விளையாடிய இந்த பள்ளி மாணவர் கற்பகவள்ளி, விழாவின்போது கவுரவிக்கப்பட்டார்.
முதுகலை ஆசிரியை இந்திரா நன்றி கூறினார். இறுதியில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.