• June 8, 2025

கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் சரியாக செயல்படுகிறதா? ஆட்சியர் ஆய்வு

 கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் சரியாக செயல்படுகிறதா? ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கக்ப்பட்டு வருகிறது. சமீபத்தில் முதல் அமைச்சர் மு/க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் கீழ் கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு  காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் சரியாக செயல்படுகிறதா என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று ஆய்வு செய்தார் காலையில் கோவில்பட்டி வந்த ஆட்சியர் செந்தில்ராஜ்,  நகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தயாரிக்கும் மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் .மகாலட்சுமி, வட்டாட்சியர் சுசீலா ,நகராட்சி ஆணையாளர்.ராஜாராம் ஆகியோர் சென்றனர்,

உணவு தயாரிக்கும் கூடத்தில் ஆய்வை முடித்துக்கொண்டு ஆட்சியர்  செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் கோவில்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளிகூடம் சென்றனர். அங்கு  பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு  ஆட்சியர் .செந்தில் ராஜ் உணவு பரிமாறினார். பின்னர் உணவின் தரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *