பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் வருகிற 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.
கடைசியாக பழனி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளும்பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in என்று இணையதளத்திற்கு சென்று ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதாவது ஒரு அவண எண்ணை சமர்ப்பித்து, அதோடு தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.
ஜன.வரி 18-ம் தேதி(இன்று) முதல் ஜனவரி .20-ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 2,000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுவார்கள். அதன்படி இன்று முன்பதிவு தொடங்கியது,.
முன்பதிவு செய்தவர்களுக்கு ஜனவரி 22-ம் தேதி இ-மெயில்மற்றும் எஸ்.எம்.எஸ். மூலம் முன்பதிவு உறுதி செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி மலைக்கோவில் கோபுர கலசங்கள் புதுப்பிக்கப்பட்டு கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று மாலை வேள்விச்சாலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
