ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 இடைத்தேர்தல்; 3 மாநில தேர்தல் தேதியும் அறிவிப்பு

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியானது. அதன்படி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் 3 மாநில தேர்தல் இன்று அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி.16-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜன.21-ம் தேதி தொடங்கி 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. மறுபரிசீலனை ஜன.31-ம் தேியும், மனுக்களை வாபஸ் பொறுவதற்காகான தேதி பிப்ரவரி.2-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதேபோன்று நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் பிப்.27-ம் தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.27-ம் தேதி தேர்தல் நடபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ந்தேதி நடக்கிறது
