கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர்-உறைபனி; மக்கள் அவதி
![கொடைக்கானல் பகுதியில் கடும் குளிர்-உறைபனி; மக்கள் அவதி](https://tn96news.com/wp-content/uploads/2023/01/201712290305454748_Massive-freezing-impact-on-Kodaikanal_SECVPF.jpg)
கொடைக்கானல் மலைப்பகுதியில் நாளுக்கு நாள் உறைபனி தாக்கமும் அதிகரித்து வருகிறது. புல்வெளிகளில் உறை பனி படர்ந்து காணப்படுகிறது. கொடைக்கானல் மட்டுமின்றி அருகாமையில் உள்ள தாண்டிக்குடி, பண்ணைக்காடு பகுதிகளிலும் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. அதே சமயம் அந்த பகுதிகளில் உறை பனி தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது,. இருப்பினும் குளிர் அதிகமாகவே இருக்கிறது,.
கொடைக்கானலில் வெப்பநிலை 6 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கிறது., இதனால் உள்ளூர் வாசிகள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். மற்றபடி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடைக்கிறார்கள். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுற்றுலா பயணிகளின் வருகை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஓரளவு இருக்கிறது. மற்ற நாட்களில் சுற்றுலா பகுதிகளில் ஆள் நடமாட்டமே இருப்பது இல்லை. இதன் காரணமாக இங்குள்ள வியாபாரிகளும் வர்த்தகம் நடக்காமல் சிரமப்படுகிறார்கள்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)