• June 8, 2025

பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா; 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி-கோவில் நிர்வாகம் அறிவிப்பு

 பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா; 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி-கோவில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி மலையில் உள்ள முருகன் கோவில் குடமுழுக்கு வருகிற 27-ம் தேதி நடைபெருகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சுடன் நடந்து வருகின்றன.  இந்த நிலையில் குடமுழுக்கு விழா குறித்த, அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.

குடமுழுக்கு விழா காலை 8 முதல் 9.30 மணி வரை நடைபெறும் எனவும், பக்தர்கள் காலை 4 முதல் 8 மணிக்குள் மலைக் கோவிலுக்கு சென்றுவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ரோப் கார் மற்றும் விஞ்ச் வழியாக 2 ஆயிரம் பேரும், படிவழிப்பாதை வழியாக 4 ஆயிரம் பேர் என மொத்தம் 6 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் குடமுழுக்கு விழாவை காண குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் மூவாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

வழக்கமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு தான் இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *