கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு மானாவாரி பருத்தி சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில், ஓட்டப்பிடாரம் வட்டம் ஒட்டநத்தம் கிராம விவசாயிகளுக்கு மானாவாரி பருத்தி; சாகுபடி தொழில்நுட்பங்கள் பற]றிய ஒரு நாள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இப்பயிற்சியானது இந்திய வேளாண் வானிலை ஆராய்ச்சி திட்டத்திற்கு உட்பட்ட ஆதி திராவிடர் துணைத் திட்டம் மூலம் நடத்தப்பட்டது. முகாமுக்கு பேராசிரியர் முனைவர் கோ.பாஸ்கர் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், மானாவாரி பருத்தி சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்து குறிப்பிட்டார்.. பின்னர் மானாவாரி பருத்தி சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி கையேட்டினை வெளியிட்டார்.

இந்நிகழ்சியில் உதவி பேராசிரியர் முனைவர் புவனேஸ்வரி, பருத்தி சாகுபடியின் உழவியல் தொழில்நுட்பங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் இணை பேராசிரியர் முனைவர் சீபா மானாவாரி பருத்தி ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்கள் பற்றி தொழில்நுட்ப உரையாற்றினார். மானாவாரி பருத்தியில் காலநிலை மாற்றத்தின் பாதிப்பு குறித்து முனைவர். கோகிலவாணி உரையாற்றினார்.
பயிற்சி முடிவில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.
