கோவில்பட்டியில் 4 பேர் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? போலீசார் புலன் விசாரணை நடத்த கோரிக்கை

கோவில்பட்டியில் இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லுரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வளைந்து நெளிந்து ஸ்டைல் காட்டி ஓட்டும் நாகரீகம் வளர்ந்து வருகிறது இது போல் வாகனம் ஓட்டினால் மற்றவர்கள் கவனம் முக்கியாமாக மாணவிகள் பார்வை நம் மீது திரும்பும் அதுதான் கெத்து என்று முட்டாள்தனமாக மனதில் நினைத்து கொண்டு செயல்படுகிறார்கள்/
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கஷ்டப்படாமல் கல்லூரிக்கு செல்லவேண்டும் என்று வாங்கி கொடுக்கும் இருசக்கர வாகங்களை அவர்கள் சரிவர பயன்படுத்தாமல் விதிமீறலில் ஈடுபடுகிறார்கள். காலை மற்றும் மாலை வேளைகளில் கோவில்பட்டி பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியில் இந்த அடாவடி காட்சிகளை தினமும் பார்க்கமுடியும் ,
இதன் மூலம் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன, என்றாவது ஒரு நாள் நடக்கும் விபத்தை தொடர்ந்து போலீசார் அதிரடி காட்டுவார்கள். இந்த நடவடிக்கை சில நாட்கள் மட்டுமே… பின்னர் காலாவதியாகிவிடும். மாணவர்கள் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்துவதும் மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவதும் என சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பெற்றோர் தங்களது மகன்களுக்கு விலை உயர்ந்த பைக் வாங்கி கொடுத்துவிட்டு சில சமயங்களில் அவர்களே தங்கள் பிள்ளையின் உயிர் மற்றும் வாழ்க்கை இழக்க காரணமாகி விடுகின்றனர். .எனவே போலீசார் .தொடர் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்,.
கோவில் பட்டி புறநகர் பகுதியில் நேற்று மாலை தனியார் பஸ் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் இருந்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 5 பேர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். .2 மாணவர்கள் பலத்த காயத்துடன் மீட்கபட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர், அவர்களில் ஒருவர் இன்று இறந்து விட்டார்,. இதனால் சாவு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து இருக்கிறது.
எனவே இந்த விபத்து நடந்தது எப்படி?. விபத்து நடப்பதற்கு யார் காரணம் என்பதை போலீசார் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்களை தடுக்க போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், பெற்றோர்கள் ஒன்று கூடி ஆலோசித்து தக்க முடிவுகள் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
