பழனி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடியை தாண்டியது; தங்கம், வெள்ளியும் குவிந்தது

முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடாக கருதப்படும் பழனி தண்டாயுதபாணி கோவில் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும். மலைக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் மட்டுமின்றி ரோப்கார் மற்றும் இழுவை ரெயில் வசதியும் உள்ளன,
இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்கள் எண்ணிகையும் அதிகம் இருக்கும். தமிழக அரசின் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கோவில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது,
எண்ணிக்கை முடிவில் உண்டியல் காணிக்கை
2 கோடியே 9 லட்சத்து 73 ஆயிரத்து 925 ரூபாய் இருந்தது. மேலும் 840 கிராம் தங்கம், 18125 கிராம் வெள்ளி வெளிநாட்டு கரன்சியாக 300 நோட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
