கோவில்பட்டி- சக்கம்பட்டி அரசு பஸ், மணியாச்சி ரெயில்நிலையம் வரை நீட்டிப்பு

கோவில்பட்டியில் இருந்து சங்கம்பட்டி வரை வந்து சென்று கொண்டிருந்த பஸ்சை வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வரை இயக்க வேண்டும் என மணியாச்சி கிராம சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மக்களி்ன் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.
அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் அழகிரிசாமி, கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளர் ஜெகநாதன், கோவில்பட்டி தொ.மு.ச. செயலாளர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி ஜோசப் மோகன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மாடசாமி, மணியாச்சி ஊராட்சி மன்ற தலைவர் பிரேமா, அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
