தூத்துக்குடி மாவட்டத்தை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட 11 மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர்

 தூத்துக்குடி மாவட்டத்தை தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட 11 மாணவர்கள் மன்னிப்பு கேட்டனர்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் , வணிகவளாகம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம் மற்றும் பூங்காக்களில் தவறான செய்கைகளை காட்டி, மாவட்டத்தை தவறாக சித்தரித்து அவமதிக்கும் வகையில் சில மாணவர்கள் வீடியோ பதிவிட்டு அதனை வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.
இந்த வீடியோ பதிவு கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். டுவிட்டரில் இப்பதிவை டேக் செய்து மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
இதுதொடர்பாக காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி 11 மாணவர்களை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுத்தும், உரிய அறிவுரைகளை வழங்கியும் அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தங்கள் செயலுக்கு மன்னிப்பு கோரியும், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் எனவும் கூறி அந்த மாணவர்கள் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *