மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்: கலை நிகழ்ச்சியுடன் தெருமுனை பிரசாரம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியார் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் அரசின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச நலத் திட்ட உதவிகள் கலை நிகழ்ச்சியுடன் விழிப்புணர்வு பிரசாரத்தை கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் 21.11.2022 அன்று காலை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று 22.11.2022 காலை 11.மணி அளவில் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலையில் கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. பொது மக்களுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளுக்கான துண்டு பிரசாரங்களை அவர்வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆக்டிவ் மைண்ட் ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன் ராஜா, நகர் மன்ற உறுப்பினர் அமலி பிரகாஷ், அவை தலைவர் முனியசாமி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ரவி மற்றும் ராஜ கோபால், ஆக்டிவ் மைண்ட் ஸ் மேற்பார்வையாளர்கள் மாடசாமி, ராம் கணேஷ், கலந்து கொண்டனர்,
மக்கள் எழுச்சி குழு காசிராசன் தலைமையில் எட்டயாபுரம், புதூர்,விளாத்திகுளம், குறுக்குசாலை,போன்ற இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச நலத் திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடை பெறும்.
