தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நிலங்களின் பாசன தேவைக்காக கடந்த 15-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, மேலூர், திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 5 ஆயிரத்து 5 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வினாடிக்கு 1,130 கனஅடி […]
அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டத்துக்கு தடை: கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கண்டனம்
கோவில்பட்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் இ.பெஞ்சமின் பிராங்கிளின் ஆகியோர் சேர்ந்து விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட எந்த ஒரு அரசு அலுவலகத்தின் முன்பும் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. மேலும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது இந்திய அரசியல் […]
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் […]
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், பட்டிணமருதூர் கிராமத்தில் அமைந்துள்ள மிக மிக தொன்மையான ‘சேக் அப்துல் காதர் (எ) சேக்கரி வாப்பா தர்ஹாவில்’ 11.9.2024 அன்று தொல்லியல் ஆர்வலர் ராஜேஸ் செல்வரதி கள ஆய்வு மேற்கொண்டார். ,தனது கீழபட்டிணம் குறித்த ஆய்வின் ஒரு கட்டமாக மேற்கொண்ட இந்த கள ஆய்வின் போது சில கல்வெட்டுக்களை கண்டறிந்ததாகவும் அது சமயம் அங்கு திருவிழா நடைபெற்றதால் மேற்கொண்டு தெளிவாக கள ஆய்வு செய்ய இயலாமல் திரும்பியதாகவும் கூறி இருக்கிறார். இந்த […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பதவி உயர்வா? ஆட்சியர் இளம்பகவத் மறுப்பு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 6.9.2024 அன்று வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக உத்தரவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்களில் ஒருவருக்கு வட்டாட்சியராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வன்முறை […]
தூத்துக்குடி அருகே மறவன்மடம், மேற்கு தெருவைச் சேர்ந்தவர் அர்ஜுனன் மகன் முருகன் (வயது 23). இவர் புதுக்கோட்டை பாக்கியலட்சுமி நகரில் குடியிருந்து வந்தார். இன்று காலை 7 மணி அளவில் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் நின்று நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத முருகன் தப்பிக்க வழியின்றி அவர்களிடம் மாட்டிக்கொண்டார். அரிவாள் வெட்டுக்காயங்களால் கீழே சரிந்து […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குகன்பாறை என்ற இடத்தில் பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயார் செய்யும் பணியின்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் ஒரு அறை முற்றிலுமாக இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து […]