தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன் வெளியிட்ட வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க கழக ஒருங்கிணைப்புக் குழு ஆய்வுக் கூட்டத்தில் மாநில இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், தி.மு.கழக மாணவர் அணியின் நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக அளவில் மாணவர் அணிக்கு நிர்வாகிகளை நேர்காணல் மூலம் தேர்வு செய்திட கழக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். அவரது […]
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் […]
சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி. இவர் மீது 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவழக்கில் தலைமறைவாக இருந்த காக்காதோப்பு பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்காதோப்பு பாலாஜி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காக்காதோப்பு பாலாஜியை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், போலீசார் மீது தாக்குதல் நடத்திவிட்டு அவர் தப்பியோட முயற்சித்தார். இதையடுத்து, காக்காதோப்பு பாலாஜி […]
அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ,தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாளை முன்னிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு, மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.செம்மலை, சேலம் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமானஜி.வெங்கடாஜலம், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.பாலசுப்ரமணியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் […]
குஜராத் முதல்-மந்திரியாக நான்கு முறையும், நாட்டின் பிரதமராக 3வது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று 74வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித்தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், மாநில கவர்னர்கள், மத்திய மந்திரிகள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் இந்தநிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். . இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் […]
பிரபல இந்தி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், ஹிரித்திக் ரோஷன், ரிமி சென், உதய் சோப்ரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான படம் ‘தூம்’. இதன் வெற்றியைத்தொடர்ந்து, அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி கவனம் பெற்றனகடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு தூம் 3 வெளியானது. இதில், அபிஷேக் பச்சன், அமீர்கான், உதய் சோப்ரா, கத்ரினா கைப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது இதன் 4-வது பாகத்தை உருவாக்க படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் […]
ஜெய்பீம்’ பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170-வது படமான ‘வேட்டையன்’ உருவாகியுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், அமிதாப்பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.நேற்று, இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி சமீபத்தில், ரித்திகா சிங்கின் கதாபாத்திர போஸ்டர் வெளியானது. ரூபா […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவர், நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்திலும், யாஷ் நடிக்கும் ‘டாக்சக்’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு அம்மனாக நடித்திருந்த படம் ‘மூக்குத்தி அம்மன்’. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்திருந்த இப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியாகி இருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம்தான் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இதன் 2-ம் பாகம் […]
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பாஜகவின் வழிகாட்டுதல் குழு தலைவராக இருக்கக்கூடிய எச்.ராஜா தொடர்ந்து வன்மமாக பேசுவார் என்பது தமிழ்நாட்டு மக்கள் அறிந்தது. ஆனால், தற்போது ராகுல்காந்தி அமெரிக்காவில் பேசிய பேச்சையெல்லாம், திரித்து பேசுகிறார். ராகுல் காந்தியை தேச துரோகி என்கிறார். இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயலை அவர் கைவிட வேண்டும். யார் தேசத்துரோகி? யார் தேசத்திற்கு எதிராக செயல்பட்டார்கள்? என்பதை அவர் தெரிந்துகொண்டு பேச வேண்டும். […]