• May 20, 2024

Month: November 2023

கோவில்பட்டி

மின்னல் தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி

தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம்,கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த தி.மு.க. கிளைச்செயலாளர் ராமமூர்த்தி (எ) செல்வராஜ் மனைவி.அமுதமலர்(வயது 35)  1-ந்தேதி பெய்த மழையின்போது  மின்னல் தாக்கி இறந்து போனார்.  இதையொட்டி அவரின் குடும்பத்தினரிடம்  முதலமைச்சரின் பேரிடர் மேலாண்மை நிதி ரூ.4-லட்சம் அடங்கிய காசோலையை அமைச்சர் கீதாஜீவன்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் ஆகியோர் வழங்கி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய்,  விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சசிக்குமார், வெங்கடாசலம் புதூர் கிழக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வாக்காளர் பெயர் சேர்ப்பு-திருத்தம் முகாம்; 4 நாட்கள் நடக்கிறது

தமிழகம் முழுவதும் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க , நீக்க மற்றும் திருத்தம் செய்யும் முகாம் இம்மாதம் 4 நாட்கள் நடக்கிறது. கோவில்பட்டியிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. நாளை 4-ந்தேதி,  5-ந்தேதி , மற்றும் 18,19.11.23-ந்தேதிகளில் இந்த முகாம் உங்கள் வாக்குசாவடியில்(அதாவது நீங்கள் ஓட்டுப்போடும் வாக்குசாவடி) நடக்கிறது. வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்யதேவையான ஆவணங்கள் விவரம் வருமாறு:_ அடையாள சான்றுக்கு பள்ளி சான்றிதல, ரேஷன் கார்டு, பான்கார்டு,ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், […]

தூத்துக்குடி

திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா 13ந்தேதி  தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வரும் 13ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, பின்னர் மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும். பக்தர்கள் காப்புக்கட்டிக்கொண்டு சஷ்டி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வாலிபர், மனைவியுடன் படுகொலை; காதல் திருமணம் செய்த 3 நாளில் பரிதாபம்

கோவில்பட்டியை சேர்ந்த லாரி லோடுமென் வசந்தகுமார். இவரது மனைவி சுமதி. இவர் தூத்துக்குடி ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் மாரிச்செல்வம்(வயது 24) இவர் சிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர்களது குடும்பத்தினர் தூத்துக்குடி முருகேசன்நகரில் வாடகைவீட்டில் குடியிருந்து வருகின்றனர்.  தூத்துக்குடி திரு.வி.க நகரை சேர்ந்த பால்வியாபாரி முத்துராமலிங்கம் என்பவரது மகள் கார்த்திகா(21). மாரிச்செல்வமும், கார்த்திகாவும் 2 வருடமாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனால் கடந்த 30ம் தேதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை 

கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில்  சங்கடஹர சதுர்த்தி  பூஜை நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீ வெற்றி விநாயகருக்கு மஞ்சள்,  பால், தயிர் உட்பட 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்ரமணிய ஐயர் செய்தார்.சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  ஏற்பாடுகளை கோவில் தலைவர் தங்கவேல், செயலாளர் மாரிச்சாமி பொருளாளர் லட்சுமணன் மற்றும் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தூத்துக்குடி

வடகிழக்கு பருவமழை: அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் லட்சுமிபதி அவசர உத்தரவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில்; மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்ததாவது:- இந்திய வானிலை மையத்திலிருந்து வரப்பெறும் கனமழை குறித்த எச்சரிக்கைகளை உடனுக்குடன் கீழ்நிலை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகவல் தெரிவிக்க நடவடிக்கை […]

சினிமா

நடிகர் ஜூனியர் பாலையா மரணம்

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த ஜூனியர் பாலையா , கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை திரைப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70 பழம்பெரும் நடிகர் டி.எஸ் பாலையாவின் மூன்றாவது மகன்  ஜூனியர் இவரின் இயற்பெயர் ரகு பாலையா. திரையுலகத்திற்கு அறிமுகமானதும் இவரை பலர் ஜூனியர் பாலையா என அழைக்கத் தொடங்கினர். இவர் 40 […]

ஆன்மிகம்

திருமண தடை நீக்கும்  தலம்-மாகாளநாதர் கோவில்

பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் வரிசையில் 55-வது தலமாக இருப்பது அம்பர் மாகாளம். தற்போது இத்தலம் மக்கள் பேச்சு வழக்கில் கோயில் திருமாளம்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இது “மாகாளம்” எனப்பட்டது. சோமாசி மாற நாயனார்  யாகம் செய்த பதி. திருமணத் தடை நீக்கும் பல பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அம்பர் மாகாளமும் ஒரு திருமணத் தடை நீக்கும் தலமாக […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்

கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது ஜெயந்தி விழாவையொட்டி தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. அண்ணா பஸ் நிலையம் முன்புறம் உள்ள தேவர் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் வெயிலுமுத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். . மாநில பொதுச் செயலாளர் வேம்பு பாண்டியன், பொறுப்பாளர் ஆரியா பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் நிறுவன தலைவர் செல்வம் […]

தூத்துக்குடி

பொதுப்பணித்துறை அதிகாரி அலுவலகத்தில் ரூ.3.37 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல்

தூத்துக்குடி வ.உ.சி. சாலையில் பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் கட்டுமான செயற்பொறயாளா், உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாருக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பீட்டா் பால்துரை தலைமையில், ஆய்வாளா் அனிதா, உதவி ஆய்வாளா் ஜம்புநாதன் மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அலுவலகத்தில் நேற்று  புதன்கிழமை மாலையில் […]