• May 9, 2024

Month: January 2023

கோவில்பட்டி

பா.ஜ.க.உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை

கோவில்பட்டி சட்டமன்ற சக்தி கேந்திர பொறுப்பாளர் அம்மன் மாரிமுத்து ,கோவில்பட்டி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மாடசாமி, சந்தானம் , வினோத்குமார், விஜயலட்சுமி ஆகியோரை நேரில் சந்தித்து வினோத் குமார் பூத்தில் பா.ஜ.க .ஓட்டு கள் எவ்வாறு உள்ளன என்பதை ஆய்வு செய்தார். உறுப்பினர் சேர்கை படிவங்களை அவர்களுக்கு வழங்கி ஆலோசனை நடத்தப்பட்டது. ஊடகப்பிரிவு மாவட்ட துணை தலைவர் காளிராஜ் நிர்வாகிகள் நாராயணசாமி, கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் உட்பட்ட தெற்குத் திட்டங்குளம்சக்தி […]

செய்திகள்

கோவில் சொர்க்க வாசல்  திறப்பின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயரிழந்த புகைப்பட கலைஞர்

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெகு விமரிசையாக சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பையொட்டி பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி பாதுகாப்பிற்காக 1,250 போலீசார் சுழற்சி முறையில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது, தி இந்து ஆங்கில  பத்திரிக்கை புகைப்பட கலைஞர் கே/வி. சீனிவாசன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு […]

செய்திகள்

கொரோனா வீரியம் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

காஞ்சீபுரம் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார கட்டிடங்கள், நர்சு குடியிருப்புகள்,  புறநோயாளி பிரிவு கட்டிடம் உள்ளிட்ட 9புதிய கட்டிடங்கள் திறப்பு விழா ஶ்ரீபெரும்புதூர் சிவன்தாங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கட்டிடங்களை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் […]

தூத்துக்குடி

ஓடும் வேனின் உச்சியில் இருந்தபடி பட்டாசு வெடித்து புத்தாண்டு கொண்டாட்டம்; 2 பேர்

ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அந்த வீடியோ காட்சியில் பதிவான வேன் நம்பரை  கொண்டு விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வேன் […]

செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு: கழுத்து அறுபட்டு ஓடி வந்த வாலிபர் பஸ்  நிலையத்தில் சுருண்டு

திண்டுக்கல் பஸ் நிலையம் நேற்று  இரவு 9 மணி அளவில் பரபரப்புடன் இருந்த சமயத்தில் கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்ட சொட்ட ஒரு வாலிபர்  ஓடி வந்தார். இதை பார்த்த பயணிகள் பயந்துபோய் ஒதுங்கினர். நத்தம் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்துக்கு வந்த அந்த வாலிபர்  நடைமேடையில் சுருண்டு விழுந்து இறந்து போனார். இதுகுறித்து அறிந்த திண்டுக்கல் வடக்கு போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் […]

செய்திகள்

திண்டுக்கல் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி   கொண்டாடப்படுகிறது.. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் “சொர்க்க வாயில்” என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர். அதன்படி  இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் பேரணி

கோவில்பட்டியில் தி லிட்டரரி அசோசியேசன் மற்றும் ராஜ் யோகா ஸ்கேட்டிங்  ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் இணைந்து புத்தாண்டை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் பேரணியை நடத்தினர்.  கோவில்பட்டி   பயணிர் விடுதி முன்பு தொடங்கிய ஸ்கேட்டிங் பேரணி மாதாங் கோவில் ரோடு வழியாக சென்று புது ரோட்டில் அமைந்துள்ள தி லிட்டரரி அசோசியேஷன் கிளப் முன்பு நிறைவடைந்தது. சாலை விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கு.நெடுஞ்செழிய பாண்டியன்  சிறப்பு […]

தூத்துக்குடி

குற்றாலம் அருவியில் தவறிவிழுந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் பாராட்டு

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தபோது அவரது மகள் ஹரிணி (வயது 4) தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள். அப்போது இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்த வாடகை கார் டிரைவரான விஜயகுமார் (24)என்ற இளைஞர்  விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமி ஹரிணியை பத்திரமாக […]

கோவில்பட்டி

ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளையின் பொருளாளர் பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. . 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராசு  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மரக்கன்றுகள் நட்டினார் . சங்கரலிங்கபுரம் ரோடு,எட்டயாபுரம் ரோடு,கதிரேசன் கோவில் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவில் ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சரவணன்,செண்பகராஜ்,செந்தில் குமார்,நல்ல தம்பிமற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன்  […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசு

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்று வரும் தேசிய புத்தக கண்காட்சியில் திருக்குறள் புத்தகத்தோடு புத்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டியை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் குறள் நெறி வழி நடக்கவும்,வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ளவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் திருக்குறள் புத்தகம் புத்தாண்டு பரிசாக வழங்கப்பட்டது. இந்த  நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமைதாங்கினார்..கோவில்பட்டி உரத்த சிந்தனை வாசகர் வட்ட தலைவர் சிவானந்தம், ரோட்டரி […]