கோவில்பட்டி லாட்ஜில் தீப்பெட்டி ஆலை உரிமையாளர் தற்கொலை

கோவில்பட்டி புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (வயது 46). தீப்பெட்டி ஆலை உரிமையாளர். இவரது தொழிற்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீவிபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாமுவேல்ராஜ் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் கோவில்பட்டியில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் மேற்கு பொலீசார் நேரில் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,
சாமுவேல்ராஜ் மரணம் தொடர்பாக மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
